Wednesday, September 14, 2016

கடலின் தூரங்களுக்குள்


இன்னும் சில பொழுதுகள்
எஞ்சியிருக்கின்றன....
இரவுகளுக்குள் மெல்ல மெல்ல
தேயும் ..
இந்தப் பகல்களுக்குள் நாம் 
கரைந்து போவதற்குள்!

அவ்வப்போது வந்து
கால்களைச் சீண்டும் அலைகளாகட்டும்
வளைகளுக்குள் இருந்து
எட்டிப் பார்க்கும் நண்டுகளாகட்டும்..
எதையும் சட்டை செய்யாமல்
அதன்போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது
நமது பொழுதுகள் ...

உன் மௌனத்தை
உடைத்துப் பார்க்க முடியாமல்
கடலின் தூரங்களுக்குள்
கலைந்து போகின்றன என் விரல்கள்..
வெறிச்சோடிக் கொண்டிருக்கும் மணல்வெளிகளில்
வார்த்தைகளைத் தேடித் தேடித் திரும்புகின்றன..
நம் நான்கு விழிகளும்!

கழிந்து போன
எத்தனையோ ஞாயிறுகளைப் போல தான்
இன்றைய பொழுதும் கழிகிறது..
பரவாயில்லை ....
உன் மௌனம் உடையும்
அந்த ஒரு ஞாயிறுக்காக !!

#முனியாண்டி ராஜ்.

No comments:

Post a Comment