கட்டுரைகள்

எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள் இன்று. சிறுகதை, நாவல் வாசிப்பை எனக்குள் ஏற்படுத்தியவர். நான்காம், ஜந்தாம் ஆண்டு படிக்கும்போதே என் மாமா நிறைய நாவல்களையும் தொகுப்புகளையும் கொண்டு வந்து கொடுத்து விடுவார். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தொகுப்பை வாசித்து, அதைப் பற்றிப் பேச வேண்டும். அகிலன், ஜெயகாந்தன் போன்றோர் அப்போதுதான் எனக்கு அறிமுகமானார்கள். இவர்களில் ஜெயகாந்தன் புத்தகங்களே அதிகம். அவருடைய எல்லாப் புத்தகங்களையும் தேடிப் படிக்கும் வாய்ப்பை எனக்குப் பின்னர் ஏற்படுத்தியவர். அவருடைய புத்தகங்களுக்கென தனி அடுக்கு இருக்கும். அவருடைய சில நாவல் கதாபாத்திரங்கள் இன்றும் மனதில் உலாவுகின்றன. இவரைப் பற்றி அதிகம் பேசலாம். பேசிக் கொண்டே இருக்கலாம். எனக்குள் வாசிக்கும் வெளியைத் திறந்துவிட்ட இத்திலகத்திற்கு இன்று பிறந்த நாள்





No comments:

Post a Comment