Wednesday, September 14, 2016

மிருகம் மறந்த பொழுதுகள்...




































மனித தோற்றம்
தெரியுமா உனக்கு டார்வின்
பேசத் தெரியாமல்
படிக்கத் தெரியாமல் போன
எங்களுக்குச்
சிந்திக்கக்கூட தெரியாதலா போகும்
மனிதன் என்பது நீங்களே
வைத்த பெயர் தானே
மிருகமென எங்களை அழைப்பதுபோல்!
வன்முறைகளுக்குள்
நாங்கள் தாழ்ந்ததையோ..
மனித வதைகளில்
ஆறு அறிவுகள் சறுக்கியதையோ..
மண் பிடிக்கும் ஆசைகளில்
மனம் கழண்டு விழுந்ததையோ....
குடும்ப உறவுகளில்
குலங்கள் பிரிந்து சிதைந்ததையோ..
காவல் என்ற பெயர்களில்
காலாடித்தனங்கள் மிகுந்ததையோ..
கூண்டுகளுக்குள் மனிதங்களை
சிறை வைத்ததையோ..
நாங்கள் அறியவில்லைதான்..
மதங்களுக்குள் நாங்கள்
வகைபிரிந்து விடுவதுமில்லை..
மனித வியாபாரங்களில்
எந்த மிருகமும் இன்னொரு மிருகம்
கடத்துவதுமில்லை..
கடவுள்கள் விரித்து
மத வணிகம் புரிவதுமில்லை..
விரிந்த எங்கள் வனாந்திரங்களில்
வழிபாடுகள் நிறைவதுமில்ல..
மனிதமிழந்த உங்களைப் போல்
நாங்கள் மிருகமிழப்பதுல்லை
உங்கள் மொழியில்
மனிதமென்பதை அறியோம்..
எங்கள் நெறிகளில்
மிருகம் என்பதே உயர்வாம்
உங்கள் அகராதிகள்வழி
நாங்கள் மிருகங்களாகவே
இருந்து விடுகிறோம்..
கல்வியறிவோ..
கலையறிவோ..
கலவியறிவோ...
உறவறிவோ...
உணர்வறிவோ...
எதுவானவாலும்
பயிலரங்குகளிலும் பணிமனைகளிலும்
நீங்களே கற்றுக்கொண்டு வாருங்கள்
எங்கள்
வனங்களின் வாசலுக்கு....
மிருகம் கற்றாவது வெளியேற!!!


No comments:

Post a Comment