Wednesday, September 14, 2016

காதலெனப்படுவது இதுவெனில்....


விழித்தெழும் வேளையில்
இரவுகனாக்களின் சில எச்சங்கள்..
சாலை நிறுத்தங்களில்
வண்ணம் மாறும் சமிக்ஞைகளின்
இடைவெளிகளில்
கடந்துசெல்லும் சுடிதார்களிளெல்லாம்
உன் முகம்..
எழுதுகோல் விரல்களில் வழிகையில்
உன் பெயரின் நர்த்தனம்
கவிதை என்ற பெயர்களில்..
மாலைத் தேநீருடன்
உன் ஒற்றைவிழிப் பார்வை பிம்பம்..
மௌன மழைகளில்
லேசான சாரலின் நனைதல்..
கனத்த மாரிகளின் மிரட்டல்களில்
குடை பிழைத்த
உடலுரசும் அந்த வெப்பங்கள்..
சினிமா கதாநாயகிகளில்
அவ்வப்போது மாறும் உன்முகம்..
ஏதோ ஒரு நினைவில்
திடீரென சுவர்மோதும் போது
'என்னடா கனவா' என்ற சொற்களில்
இடறிவிடும் உன் பாங்கு....
உறங்கும்முன்
ஏதோ ஒரு சினிமா பாடலில் நீ...
ம்ம்ம் ....
இவையனைத்தும்தான் காதலென்றால்
நீயும்
அப்படியே இருந்துவிட்டுப் போய்விடு
என்னைக் கொல்வதைத் தவிர!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment