Wednesday, September 14, 2016

அவன் மரித்துதான் விட்டான்


அவன் மரித்து விட்டதாய்தான்
வந்து சொன்னார்கள் ..
சாரை பிடித்து நின்ற கூட்டமும்

சாலை மறித்த வாகனங்களும்
அவன் வாழ்க்கையை
எடுத்துக்கூற முயன்றன..
கூட்டம் விலக்கி முகம்பார்க்கும்
கூட்டம் என்னையும் இணைத்தது..
பூக்களுக்குள் அவன் முகம்
காணாமல் போயிருந்தது ....
அவனைப் போலவே!
'அண்ணன் எப்படி இருந்தாரு'
துக்கமின்றிச் சிரித்த கூட்டம்
மதுபாட்டில்களில்
மனம் தொலைந்திருந்தது..
'வாணவெடி தெரிக்கனும்ல...'
எக்காளச் சிரிப்புடன்
எதையோ தேடித்தேடிப் பார்த்து
மீண்டும் மூழ்கியது ..

மாலைகள் போட இடமின்றி
இன்னும் கொஞ்சம் ஒதுங்கியது
சவப்பெட்டி...
'போடலனா பெரிய குத்தமா போயிடும்'
கிசுகிசுத்த பெரிசின் வாய்
சட்டென மூடப்பட்டது....
பிணங்கூட வாள் எடுக்கும்
பார்த்து....
வன்முறை வாடையுடன்
நாளைக்கே பிணம் புறப்பட்டுவிடும்
இன்னொரு விதை விதைத்து!!


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment