Wednesday, September 14, 2016

இன்னொரு கனவுக்கான ஒப்பனையில்..




வீசிய அரிவாளால்
குபுக்கென்று கொட்டிய குருதியில்
கைகளைக் கொஞ்சம் நனைத்துக்கொண்டான்

சுற்றிச்சுற்றி
கைகளாலும் கால்களாலும்
அவன் காட்டிய வித்தையில்
சுருண்டு விழுந்த வில்லன்களில்
கால்களைக் உதறிக் கொண்டான்
ஓடியாடி புரண்ட காதல்களில்
அவனும் கொஞ்சம்
ஒட்டிக் கொண்டான்
இதழோடு இதழ் ஒட்டும்நேரம்
சட்டென நுழைந்த ரோஜாவால்
உச் மட்டுமே கொட்ட முடிந்தது அவனால்
சாலையோர மகளிர் பார்வைகளனைத்தும்
அவன்மேல் விழுவதாகவே
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான்
பறக்கும் மகிழுந்துகளிலும்
தாவும் இன்னுந்துகளிலும்
வளசை அவன்கையிலேயே இருந்தது
அனல்தெறிக்கும் வசனங்களிலும்
நறுக்கென்ற வரிகளிலும்
அவனும் கொஞ்சம் செருமிக்கொண்டான்
கூட்டம் கரையத் தொடங்கிய பின்னும்
அவன் மட்டும் அமர்ந்திருந்தான்
இன்னொரு திரையினூடே..


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment