Wednesday, September 14, 2016

வெறி மிருகமானவன்


நீ குடித்த குருதியின் வீச்சம்
இன்னும் குமட்டிக்கொண்டு இருக்கிறது
உன் கண்களின் இனவெறியமே

உன் முகம் நினைக்கையில்
வந்து போகிறது..
மனித இரத்தம் குடிக்கும் காட்டேரிகளாகவே
நீ நிற்கிறாய்
எங்கள் இனத்தில் நீ செலுத்திய
காமவெறிகள் ...
அடங்கா தீப்பிழம்பாய்
எனக்குள் இன்னும் வழிகிறது
மனிதனொருவன் மிருகமானவன்
என்பதில்
உன் பெயர் மட்டுமே நிற்கிறது
வரலாறுகளில் வீழ்ந்து மக்கிய
சர்வாதிகாரிகள் அனைவரையும்
நீ மிஞ்சியது வரலாறுக்கே அவமானம்
சிறுகூட்டம் ஒடுக்க
பேடிகளின் கூட்டுச்சேர்க்கையில்
நீ சிரித்ததை..
எழுதிக்கொண்டே போகலாம்!
தூரத்தில் நின்று பொருமியவர்கள்
நீ அருகில் வந்தும்
கைகசக்கிக் கொண்டு மட்டுமே
பார்க்கிறோம்...
இயலாமை எண்ணி!!!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment