Wednesday, September 14, 2016

^^முகமூடி மனிதர்கள்^^


எந்த முகமூடிக்குள்
என் முகம் பொருந்துமென
ஒவ்வொன்றாய் போட்டுகள் பார்க்கிறேன்..


நேரத்திற்கேற்ற நடிகனாய்..
பொய்க்கேற்ற சிரிப்பனாய்
ஆளுக்கேற்ற அடிமையாய்
நகைப்புக்கேற்ற நட்பாய்
வேலைக்கேற்ற நாயாய்
குரலுக்கேற்ற அழைப்பாய்...
ஒவ்வொன்றாய்.........
எதற்கும் பொருந்தாமல்
என் முகம் களைத்துப் போகிறது..

பொய்ம்மை சிரிப்பினில்
வஞ்சம் கலக்கத் தெரியாமல்
என்னிடம் நானே
தோற்று விழுகிறேன்...
கடந்து போகும் ஒவ்வொருவரும்
ஏதோ
கற்றுக் கொடுத்துப் போகிறார்கள்...
நட்பில் பதிவேற்றிய தருணப் பேச்சுகளை
பகைகளில் ஆயுதமாக்கி தாக்குகிறார்கள்
உறவின் விளிம்புகள் புரியாமலும்
உரசல்கள் விளங்காமலும்...
..........
...............

மனசாட்சிக்கு வெளியே
எதையும் கற்கத் தெரியாமல்
கழண்டு விழுகிறது மனது....


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment