Wednesday, September 14, 2016

அவனும் தலைவன்தான் .....


அவனைத்தான் அவர்கள் 
தலைவன் என்றார்கள்
அவன் நாவினிப்பில் சர்க்கரை ஊற்றி

வீதியெங்கும் விரித்திருந்தான்
சர்க்கரை நக்கிய கூட்டம்
சகதி மறந்து வீழ்ந்திருந்தது
விழிகளில் பின்பக்கங்களின்
அரவங்கள் பதுக்கி
புன்னகைகள முன்னே பரப்பியிருந்தான்
வார்த்தைகளில் கட்டுண்ட கூட்டம்
சரிந்து சரிந்து விழுந்தது..
பொய்களுக்கும் வக்கிரங்களுக்கும்
வண்ணம் தீட்டிய கண்காட்சிதனில்
மூளை செத்த மனிதர்கள்
முகமிழந்து போயிருந்தனர்..
உண்மைகளில் கறுப்புப் பூசி
கட்டிலுக்கடியில் பதுக்கியிருந்தான்..
எழுத்துகளில் நேர்மைகளை வடித்து
மிதக்க விட்டிருந்தான் கரு மையினில்
மெய்மறைத்து..!!
வசதியாக கைகோர்த்துக் கொண்ட
சமூக வலைதளங்களில்
ஆதரவுக்கூட்டம் தலைவா என்றது
மைதனில் மரித்து......
பதாகைகள் ஏந்திய போராட்டம்வரை
எந்த ஒரு ஆதாரம்தனிலும்
தன்னை மறைத்தே வந்திருந்தான்
தன்னலத் தலைவன்..

மந்தைக் கூட்டம் மதிமயங்கி
'மனிதம்' காக்கும் போராட்டத்தில்
மனம் ஒளித்த வார்த்தை வியாபாரியிடம்..
மனிதமும் மரணித்திருந்தது
உண்மையுடன்!!!

No comments:

Post a Comment