Wednesday, September 14, 2016

காற்று..



மௌனமாய் அமர்ந்திருக்கிறாய் உள்ளே
இறுக்கி மூடிய இதழ்களுடன்!
கதவைத் 
தட்டித் தட்டித் பார்த்துவிட்டு
மறுபடியும் சொல்லாமலேயே போகிறது

காற்று..
காற்றுக்குத் தெரியும்
உன் மௌனத்தின் தூரம்!
உனக்கும் தெரியும்
இந்தக்
காற்றின் ஆழம்!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment