Wednesday, September 14, 2016

உன்னைக் காணும்வரை!!!!


சட்டென உடைந்த வானில்
குடைதேடி பதுங்கும் பலரில்
நானும்தான் இருந்தேன் ஒருவனாய்!
அழகின்றி...
...சாலைகள் தனதாக்கி

...வாய்க்கால்கள் வாய்நிறைத்து
...காலணிகள் புகுந்து
...பாதங்கள் களவாடித்தின்று
...கேசங்கள் களைத்து
...உடல்முழுக்க நடந்து
இத்யாதி... இத்யாதி ...
உன்னைக் காணும்வரை!!!!
குடை வீசிய
உன்மேல் மழை நடந்த அழகில்
அதைத் தவிர வேறேதும் அழகில்லை
இப்போது எனக்கு!


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment