Wednesday, September 14, 2016

பிரிவுகளும் சில சமயங்களில் ....


உடைந்துபோன பல இரவுகளின்
எச்சத்திலிருந்து
என்னைச் சேமித்து வந்திருக்கிறேன்

தனித்துவிட்ட நள்ளிரவுகளின் குளிரில்
நான் வெம்மையே பார்த்திருக்கிறேன் ..

ஒரு மௌன வனவாசத்தில்
என் கோபங்களின் கடிவாளம்
வைத்தது வைத்தபடியே இருக்கிறது..
எதையோ சாதித்துவிட்ட இறுமாப்பு
உன் நடையிலும் தெரிகிறது..

உன் உதட்டோரப் புன்னகைகள்
என்னை உரசும் போதெல்லாம்
திடீரென விழித்து எழும் கனவுகளின் ஓரம்
என்னைத் தொலைத்தும் இருக்கிறேன்
நீ மட்டும் தொலைந்தது ....
..... தொலைந்தபடியே!!!


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment