Wednesday, September 14, 2016

ஒரு மௌன தவம்..



என் வழி
எனக்கானதாகவே இருக்கிறது..
சினமேற்றும் முயற்சிகளில் 

என் பொறுமை உரசப்படும் போதெல்லாம்
விலகிச் செல்வதே விருப்பாகிறது
நான் பக்குவப்பட்டு விட்டதாய்
பக்கமிருப்பவர்கள் பகர்கிறார்கள்
கோபம் தணித்த முதிர்ச்சிநிலையில்
மனம்
மாறிவிட்டதாய் புகழ்கிறார்கள்
..........
பயந்து விலகுவதாய்
எதிராளிகளின் இரட்டைப் பேச்சுகளில்
இரணப்படும் மனதை
அடிக்கடி
இழுத்து நிறுத்த வேண்டியுள்ளது
பொறுமைக்கும் பொங்கலுக்கும் இடையில்
அந்த மெல்லியக் கோடு
சன்னமாய் அழிந்து வருவதை
அவ்வப்போது சிவக்கும் கண்கள்
காட்டிக் கொடுக்காவரை
என் மௌன தவம்
ஒரு முதிர்ச்சியே!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment