Wednesday, September 14, 2016

கரைகளைப் போலவே ...



விரிந்து கொண்டே போகும் கரையினை
அரித்தெடுக்கும் அலைகள்... 
கலங்காமல்......மயங்காமல்...
தன் ஆளுமையை அழுத்தமாக்கிக் கொண்டே
நகரும்... 

அந்தக் கரைகளைப் போலவே ...
எவ்வளவு ஆழமாகவும் அகலமாகவும்
நீ என்னை அரித்தெடுத்தாலும்
என் பாதங்களின் அழுத்தங்கள்
பகன்று கொண்டே போகும்
நான் யாரென்று!!!!


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment