Wednesday, September 14, 2016

#மகளதிகாரம்


மௌனம் தரித்த பொழுதுகளில்
என் மனம் கலைத்தவள் நீ
'அப்பா' என்ற வார்த்தைகளில்
அகராதி மறந்த பொழுதுகளே அதிகம்
பிஞ்சு விரல் இரசித்த விரல்கள்
நீ வளர்த்து பெண்ணாகியும்
அப்படி இருக்கின்றன....
மன இறுக்கங்களாகட்டும்
உழைப்பின் களைப்புகளாகட்டும்
உன் ஒற்றைப் புன்னகையில்
இடம்கழுவிப் போயிருக்கின்றன..
இது வேணும்பா என்ற வார்த்தைகளை
வெறும் பணங்காட்டி
உன்னை ஏமாற்ற விரும்பியதில்லை
உன் தாயிடம் காட்டும் கோபம்கூட
உன்னிடம் முடியாமல் பணிந்திருக்கின்றன
பல்கலைக்கழக வாசலில்
விரல்பிடித்து பயமாயிருக்கு வாங்கப்பா
என்ற வார்த்தைகளில்
மீண்டும் நான்
பாலர்ப்பள்ளியில் போய் விழுந்தேன்..
மணப்பெண் கோலத்தில்
மறுவீடு நீ சென்ற போது....
உன்னோடு நானும் வந்தேன் மனதோடு!!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment