Wednesday, September 14, 2016

தோழமையின் கறுப்புப் பக்கம்



தோளில் கைபோட்டவனின் விரல்
தொண்டைக் குழியில் இறங்கும்வரை..
தோழமையின் கறுப்புப் பக்கம் தெரியும்வரை...

வெள்ளைத்தாளின் முகங்களில் தெறித்தவை

எழுத்துக்கள் என்று ஏமாந்து
விழிகள் படிக்கும் தருணங்களில்
விஷப்பாம்பாய் பாய்ந்து
கொத்தும்வரை...

கைகுலுக்கல்களின் கரங்களில்
நட்பு பரிமாறும் நேரங்களில்
மோதிர விரலில் பதுங்கிப் பாயும்
நச்சு ஊசியின் வலியை உணரும்வரை..

எதுவுமே புரியவில்லை ...

நட்புகளின் மடிப்புகளில்
நயவஞ்சகமாய் பதுங்கியிருக்கும்
நாகங்களின் சீற்றம் தெரியும்வரை...

உன் சுயநல தண்டவாளத்தில்தான்
என்னோட நீ
பயணித்திருக்கிறாய் என்று!!!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment