Wednesday, September 14, 2016

ஓர் இறுதி மனிதனின் வாக்குமூலம்


ஓர் இறுதிமனிதனின்
வாக்குமூலமாக இது இருக்கலாம்
கல்கி அவதார முதல் மனிதனுக்காக

கொண்டு செல்லப்படும்
முதல் தகவலாகவும் அமையலாம்
அவதாரங்கள் மறந்து
அரிதாரங்களில் வாழும் மானுடங்களுக்கு
இது தெரியாமலேயே போகலாம்
குருஷேத்திரங்களின் போர்முனைகளில்
இது தொடங்கி இருக்கலாம்
ஆயுதம் மறந்த மனிதனின்
ஒரு சமாதானத் தூதாகவும்
இது ஆரம்பித்திருக்கலாம்..
மனிதம் புதைந்த ஒரு பெருவெளிக்குள்
கல்கியும் தனவதாரம் மறந்து
கொஞ்சம் கலிக்குள்
முகம் நுழைத்துப் பார்க்கலாம் ..

தூக்கிவிட வந்த வெள்ளைக்காகிதங்கள்
.... தூக்குக்கயிறுகள் ஆன இடத்திலா
அரசாட்சிகள் கவிழ்த்து
.... மக்களாட்சி முகிழ்த்த காரணங்களிலா
சுயவுடைமைகளில் களவுபோன
.... பொதுவுடைமைக் கொள்கைகளிலா
அறிவியலின் அசுர வளர்ச்சியில்
..... அறிவுகள் களவான பொழுதுகளிலா
பணங்கள் தேடி
.... மிருதங்களான மனிதங்களிலா
குடும்பங்கள் கலைந்து
.... குட்டித்தீவுகள் மிதந்ததாலா
எதுவோவென
கொஞ்சம் தடுமாறும் நேரம்
யார் கண்டது ...

கலியுகம் தொடருமென...


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment