Wednesday, September 14, 2016


இன்று
அனைத்துலக புகைப்பட தினமாமே
எதைப் பதிவது...
தூசுதட்டிய பழைய நினைவுகளில்
ஒவ்வொன்றாய் எடுத்து

புரட்டிக் கொண்டே வருகிறேன்
... புல்வெளியில் மடிசாய்ந்தபடி
... ஒற்றைக் குடைக்குள் ஒடுங்கியபடி
... முதல் வேட்டியில் நான் வெட்கி
... சேலையில் நீ சிலிர்த்து
... பொங்கலில் விரலும் படாபடி
... முதல் சினிமா மறந்தபடி
... தங்க கடற்கரையில் பாதம்மறந்து
... இத்யாதி இத்யாதி
எதுவும் மனம் வழுக்கியே
செல்கிறது....
ஒருசில கண்ணீருடன்
நீ பிரிந்த
அந்தக் கடைசி படத்தோடு!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment