Wednesday, September 14, 2016

உரக்கச் சொல்ல வேண்டியிருக்கிறது ..
ஒவ்வொன்றையும்...
உச்சந்தலையில் அழுத்தித் தேய்த்தாலும்
உரைப்பதில்லை பலருக்கு...
கற்றுக்கொண்டவன் எல்லாம்
கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க
கற்றுக் கொடுத்தவன் கைகட்டி நிற்க!!!
குமரிக்கண்டம் பேசினால்
குறுக்குச் சிரிப்பு பலருக்கு..
நட்சத்திரங்களின் நாட்டியங்களில்
மனதை இழக்கும்
இளையோருக்குத் தெரிவதில்லை..
நலிந்தவனின் மொழி நிலை!
சவப்பெட்டிகளுக்கான
ஆணிகளுடனும் சுத்திகளுடனும் காத்திருக்கும்
கூட்டத்தின் நடுவே...
நாமும் போராடத்தான் வேண்டியிருக்கிறது
ஒரு மொழியின் ....
உயிருக்காக!!!!

No comments:

Post a Comment