Wednesday, September 14, 2016

நையாண்டியாய்.............



விரல்களை ஒடித்துப் போட்டு
ஒதுங்கி நடக்கின்றன கைகள் ..
கட்டுப்பாட்டின் கட்டளையில்
கைகட்டி நிற்கும் கற்பனைகளை
நையாண்டியாய்ப் பார்த்து

ஓர உதட்டினில்
புன்முறுவல் சிந்திச் செல்லும்
உன் பார்வைகள் ....

எந்தக் கவிதையும்
உன்னைப் புரட்டவில்லை என
அறிந்தும் ..
ஓயாமல் நானும்
எதையாவது கிறுக்கிக் கொண்டே
வருகிறேன்.
....

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment