Wednesday, September 14, 2016

உன்னையும் அதனையும் தேடி!


பழைய டைரிகளின் மடிப்புகளில்
தேடித் தேடிப் பார்க்கிறேன்…
நிறம் மாறிய தாள்கள் உடைந்து
முகத்தில் புழுதியைத் துப்பிவிட்டுப் போகின்றன..
தூசுகளின் பரண்களில் 
கண்கள் அலசி ஆழ்ந்து தேடுகின்றன…
இன்னும் கிடைக்காமலேயே நழுவிக் கொண்டு செல்கிறது…
காணாமல் போன வருடங்களைப் போலவே
தொலைந்து போயிருக்குமோ..
தேடிக் கொண்டே செல்கிறேன்
நடந்த வழித் தடமெங்கும்….
உன்னையும் அதனையும் தேடி!
கொடுக்கப்டாமல் போன ஒரு கடிதம்
இன்னும் இதயத்தின் இறுக்கத்தில்..
எங்கேயாவது இருக்கும்… அதுவரை
தேடிக் கொண்டே ………….


-முனியாண்டி ராஜ்.

No comments:

Post a Comment