Wednesday, September 14, 2016

நீரின் மேல்


இப்பொழுதெல்லாம்
மழைகளுக்குள் நான் மரித்துப்போவதில்லை..
மரங்கள் தேடியோ
மறைவைத் தேடியோ
ஓடுவதுமில்லை..
தகரக்கூரைகளின் கீழும்
தடுப்பு அத்தாப்புக்களின் கீழும்
உடலை ஒளித்து
மறைப்பதுமில்லை..
இடியைக் கேட்டவுடன்
இடிந்து போவதோ..
மின்னலைப் பார்த்தவுடன்
மிரண்டு போவதோ எதுவும் கிடையாது....
மழையில் நனைவதில்
குழந்தைகளை வெல்லும்
வேகம் எப்போதே வந்து விட்டது.....
வறண்டு கொண்டு வரும்
நீரத்தேக்கங்களை நினைக்கும் போதெல்லாம்
நீரின் மேல் காதலும்
மழையின் மேல் மோகமும்
தானாகவே வந்து விடுகிறது ...

- முனியாண்டி ராஜ்.

No comments:

Post a Comment