Wednesday, September 14, 2016

சிவப்பைக் கிலாகித்தவன்..


மோதல்கள்விடுத்து அமைதியாகி
அவன் அமர்ந்தபோதுதான்
அவன் பொறுமை உரசப்பட்டது
வார்த்தைகளைக் கூராக்கி
ஒவ்வொன்றாய் அவன் இதயத்துள்
இறக்கிப் பார்த்தார்கள் ...
ஹிட்லரையும் முசோலியைப் பற்றியுமே
படித்தவன்
காந்தியை விரட்டிப் பிடிக்கலானான்
அவசரங்களிலும் ஆத்திரங்களிலும்
ஆழம் பார்த்தவன்..
தியானங்களில் பொறுமை தேடி
அமரலானான்...
உதிரம் பார்த்துப் பார்த்துச்
சிவப்பைக் கிலாகித்தவன்..
வெண்மையணிந்து வெளியேற எழுந்தபோது
வேட்டைநாய்களாய் துரத்தத் தொடங்கினர்
பொறுமை என்பது புதிய ஆடைதான்
கழட்டி வீசி
மீண்டும் வன்மை அணியுங்கால்
அவனை தீவிரவாதியென்றே
முத்திரை குத்திக் கொள்ளுங்கள்..
திரும்பும்வழி மூடிவிட்டு!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment