Wednesday, September 14, 2016

கைசிறையில் மனம்..



கைபேசிகளின் சிறைச்சாலைகளில்
சிறைபிடிக்கப் பட்டிருக்கின்றன
மனித மனங்கள்..

மாந்தனின் மூளைச்சிறைக்குள்
முழுமையான கதவடைப்புகள் நடத்தும்
விவேகங்களின் அணிவகுப்புகள்...

முகமறியா தூரத்து உறவுகளில்
கொஞ்சங் கொஞ்சமாய் களையும்
உதிர உறவுகள்..
அண்டையின் புன்முறுவல் அறியா
விழிகளின் திரைகளை மறைக்கும்
தூரத்து விருப்புகள்..

ஒவ்வொரு கரங்களும்
திறன்பேசிகளின் பிணைப்புகளில்
தன்னையே தொலைத்துக் கொண்டிருக்கும்
தருணங்களில்...
மனிதம் எட்டிப்பார்க்கத் துணிவின்றி
நாற்காலிகளின் அடியில்
தன்னை மறைத்துக் கொள்ளும்..

திடீரென தடைபடும்
இணையத் தொடர்பின் இடைவெளியில்
தலைநிமிரும் வார்த்தைகள்
ஒருமுறை .....
மீண்டும் பயணம் தொடரும்!


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment