Wednesday, September 14, 2016

பெயர்களைப் பொறுத்தருள்வீர் ..


ஏதோ ஒரு பெயரில்
அவர்கள் வாயில் உலாவுவதாக
பேசிக் கொண்டார்கள்

சுவரில் செவி வைத்தவர்கள் !
திமிரானவனாய்..
ஆணவமானவனாய்..
சுயநலமியாய்..
சோம்பேறியாய்...
பச்சோந்தியாய்...
எந்தப் பெயரிலாவது இருந்துவிட்டுப்
போகிறேன்..
என் பெயருக்குள்ளிருந்தே
வெளியேற வழியின்றி தவிக்குங்கால்
அவர்கள் பெயர் சூட்டல்களில்
ஓய்வெடுத்தே கொள்கிறேன்..
எந்தப் பெயருக்குள்ளும்
என்னைத் தொலைத்துக் கொள்ளாதவன்
நான்..
நேர்மறை எதிர்மறை பெயர்களில்
என் நிஜத்தை அழிக்க முடியாது..
அடையாளங்களுக்கெனவே
பெயர்கள் அமைந்த பிறகு
அது எந்தப் பெயராகியிருந்தால் என்ன
காலம் எழுதிப் போட்டு
காலாவதியான பெயரட்டைகளில்
அவர்களும் தொலையலாம்
இன்னும் சிறிது காலத்தில்..

எனக்கான பெயரின்
தேடுதலை முடித்து விட்டு
மீண்டும் உங்களிடம் வருகிறேன்
சாவகாசமாக..
பெயர்ப்பொருள் அறிய!!


No comments:

Post a Comment