Wednesday, September 14, 2016

அலைகளாய் கரைகளுக்கு நான்


கண்ணுக்கெட்டிய தூரங்களில் எல்லாம்
விரிந்து கிடக்கிறாய்..
கால்கள் நனைக்கும் சுகங்களில்

மனதும்
அவ்வப்போது நனைந்து விடுகிறது
ஒதுங்கா நிழல்களில்
உன்னையே
வெறித்துக் கொண்டிருக்கிறேன்

இது நிஜமானது..
எந்த நிழல்களிலும் ஒதுங்கி
முகம் மறைக்கா நிஜமிது..
ஆழியின் மையத்தில் நீர்சுருட்டி
கரைதொடும் ஓர் அலையின்
உணர்ச்சிக்குவியல் போல் வியப்பானது..
'ஓ'வெனப் பகரும் எந்தவொரு
அலையிலும் மறைந்து வாழும்
அற்புத பிரவாகமானது அது....

உன் பார்வைக் கரைகளில்
ஒதுங்கும் சுள்ளிகளாய் அல்ல..
அலைகளாய் என்னைப் பார்..
மனக்குமிழியின் உணர்வுப் பிரவாகம்
நீ ..
உன் கரைகளில் கவிதைகளைச்
சேர்க்கும் போராட்டத்தில்
பின்வாங்கியே போகிறேன்
ஒவ்வொரு கணமும் .......

இது நிஜமானது..
ஓய்வில்லா அந்த அலைகள்போல்!


#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment