Wednesday, September 14, 2016

பொய்க்குரல்கள்

அவனின் ஒற்றைக்குரலில்
உண்மைகள் தரைவிரிப்பின்கீழ்
பதுக்கப்பட்டன...

மூளைச்சலவைகளில் முகமிழந்தவர்கள்
மடிந்து விழுந்தார்கள் ..
சுயநலமிகளின் வெயிலுக்கு
அவன் குடையாகவே மாறிப்போனான்
கண்ணும் காதுமிழந்த ஊடகங்களின்
முப்பொழுது விருந்தில்
அவன் நன்றாகவே உண்டு
வயிறு பெருத்தான்....
வாத்துக்கூட்டங்களின் ஆரவாரத்தில்
அவன் தனக்குத்தானே மகுடம்
சூட்டிக் கொண்டான்..
காட்சிப்பிழைகளில் கண்ணிழந்தவர்கள்
கைகளிணைத்து கவசம் போட்டார்கள்
அவனுக்கு ...
ஒதுங்கி ஒதுங்கி நடந்த உண்மை
உள்ளுக்குள் சொல்லிக் கொண்டது
'தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்'

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment