Wednesday, September 14, 2016



வெள்ளிக் கம்பிகளாய் நீண்டு இறங்கி..
முகத்தில் குத்திவிட்டு
மௌனமாய் கலைந்து போகிறது
மழை..
தூவும் ஆரவார இசையில்
மனம் ஒன்றி..
குடையை வீசிவிட்டு
கைகளை வீசி நடப்பதில்
கால்களில் முளைக்கிறது இறக்கை..
மழையின் எண்ணங்களில்
விரட்டி விரட்டி பிடிக்கும்
கற்பனைகள் விரல்கள்...
சட்டென்று முடமாகின்றன..
"மழையிலா விளையாடுற.. இரு வரேன்"
என்ற வார்த்தைகளில்
மடாரென உடைந்து விழுகிறது
குழந்தைக் கனவுகள் ...


... முனியாண்டி ராஜ்.

No comments:

Post a Comment