Wednesday, September 14, 2016

பாவங்களின் பிதற்றல்கள்



பாவங்களை நெஞ்சிலும் 
பூக்களைக் கைகளிலும் ஏந்தி 
திசை திருப்பும் விளையாட்டுகளின்
தாளம் நழுவிய இராகங்களில்
வழக்கம் போலவே
மௌனம் சுமந்து அமர்ந்திருக்கிறார்
இறைவன் ....
உதிர்க்கும் ஓரிரு
வார்த்தைகளில் கூட
கடவுள் களவாடப்படலாம்!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment