Wednesday, September 14, 2016

மழை தீண்டா மின்னல்


வயதறியா ஒரு மழையில்
மரத்தின்கீழ் ஒண்டியவனை
ஒற்றைக் குடைக்குள் நீயழைத்தாய்..

"மரத்தின்கீழ் நிற்காதே.. மின்னல் தாக்குமாம்"
என்றாய் இளஞ்சிரிப்பினூடே..
மனதில் முதல் சிலிர்ப்பினை ஊட்டிய
அந்த உரசலில்
அடுத்தடுத்த மழைகளில்
உன் குடைக்கு ஏங்கிப்போய்
எல்லா மழைகளிலும் நனையத் தொடங்கினேன்
நீ விட்டுச்சென்ற மின்னலைத் தவிர
வேறெதுவும் சீண்டாமல்!!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment