Wednesday, September 14, 2016

சாதிகளுக்கில்லை குருதி


உனக்குள் நீயே 
கிழித்து கொண்டு பார்..
அது ஈரமற்ற இதயமாகவோகூட

இருக்கலாம்..
கிண்ணங்களில் பிடித்தோ பிடிக்காமலோ
இரசாயண ஆராய்ச்சிகளில்
கொஞ்சம் மூழ்கடித்துக் கொள்..
வண்ணங்களை கவனமாக கவனி ..
வேறுபட்ட நிறங்களில்
சட்டென விழித்தெழு
கிரகங்களின் கலைக்களஞ்சியங்களையும்
கையில் வைத்துக் கொள்
ஏதாவது ஒரு கிரக அடையாளங்களில்
காணாமல் போகாமல்
பார்த்துக் கொள்.....
கிரகவாசிகளின் வேறுபட்ட
திசைகளில் உன் பயணம் அகற்று..
உன் இரத்தம்
சிவப்பாக இருக்கும் வரை
நீ மனித சாதியென
மீண்டும் உறுதிபடுத்திக் கொள்
இன்னுமோர் சாதியைப்
பிரிக்காதவரை!!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment