Friday, February 10, 2017

கடும் மழை



அந்த மேகங்களுக்குள்தான் ஒளிந்திருந்தது
உன் கடும் மழை
கருமை சுமந்து நீ
உடலெங்கும் வன்முறை நிகழ்த்தியபோது
இதயம் மட்டுமே நனைந்தது..
எச்சரிக்கை மின்னல்களிலும்
செவியறைந்த இடிகளிலும்
குடைகள்
என்னைத்தான் குற்றம் சொல்கின்றன!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment