Friday, February 10, 2017

கடலுக்கடியில் ஒரு புயல்



கடலுக்கடியில் ஒரு புயல்
===•••===•••===•••==
சட்டென நிலைகுத்தின அலைகள் 
அரண்களில் திடீரென முளைத்த
அரக்கக் கைகளில் 
அலைகளின் விரல்கள்
வலுக்கட்டாயமாக முறிக்கப்பட்டன
பறப்பதற்குத் தயாராயிருந்த
புறாக்களின் சிறகுகள்
கண்ணுக்குத் தெரியாமலேயே
பிய்த்தெறியப்படத் தொடங்கின

அரண்களுக்குள் விழுந்த ஓட்டைகளில்
விஷங்களுடன் உள்நுழைந்த அரவங்களை
எந்த அலைகளும் கண்டு கொண்டதாகத்
தெரியவில்லை..
கரங்களுக்குள் ஏந்தியிருந்த
வெண்தாள்களின் வயிற்றுப் பகுதியில்
செங்குருதிகள் மைகளாகக் கொட்டுமென
விரிந்திருந்த மணற்பரப்புகளும் எதிர்பார்க்கவில்லைதான்..
ஈரப்பார்வையுடன் ஸ்தம்பித்துப் போயிருந்த
அலைகளுடன்கூட அவற்றுக்கு நேரமில்லை
கைகுலுக்க..

நிலைக்குத்திய அலைகளுக்காகவும்
நிர்மூலமான மணற்பரப்புகளுக்காகவும்
நடுக்கடலில் மையமிடத் தொடங்கியது
கடலுக்கடியில் ஒரு புயல்!!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment