Friday, February 10, 2017

பாவங்களின் காணிக்கை



பாவங்களின் காணிக்கை
===•••===•••===•••===
வியர்த்துக் கொட்டியது கடவுளுக்கு
வாசலில் காணாமல் போகும் செருப்புகளைவிட
கோயிலுக்குள் நுழைந்த செருப்புகளைக் கண்டு!
யார் கண்ணுக்கும் அகப்படாமலேயே
நழுவிச் சென்றன வேடங்கள்..
போர்வைகளில் சிக்கிய பாவங்கள்
கற்களில் பட்ட தேங்காய்களில் சிதறின
நகைகளைக் கடவுளின் கழுத்தில் வார்த்து
பாவங்கள் வண்ண வேட்டிகளில் நடக்கத் தொடங்கின..
ரசீதுகளில் எழுதப்பட்ட கணக்காகவே
கடவுளின் கணக்குகள் இருந்தன!
உண்டியலில் விழுந்த நோட்டுக்களை
கணக்குப்பண்ணிக் கொண்டே
உண்மைகள் சட்டைப்பைக்குள் மறையத் தொடங்க......

தீபம் காட்டப்படாமலேயே
வியர்த்துக் கொட்டியது கடவுளுக்கு!!!!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment