Friday, February 10, 2017

ஒரு தூக்கத்தின் கதை 01



ஒரு தூக்கத்தின் கதை 01
===•••===•••===•••=
நீங்களும் நானும் 
கடந்து வந்த கதைதான்
இது!
இருள் இறுக அணைத்தும்
குளிர் போர்வைகளுக்குள் ஒளிந்தும்
மனம் மட்டும்
விழிகளுக்கு வெளியே நிற்குமே
அதே கதைதான்..

இமைகளை இறுக்கிச் சாத்தியும்
இதய வெளிகளுக்குள் ஊடுருவும்
ஆட்டுக்குட்டிகளை எண்ணியும்..
விடையற்ற கணக்கு ஒன்றில்
விடை தேட முயல்வதுபோல்
உறக்கங்களைத் துரத்தித் துரத்தி
உவகின் எல்லைவரை ஓடியும்
தொலைந்தது தொலைந்ததாகவே
இருக்குமே...

ஏமாற்றங்களின் சாயல்களில்
விழும்போதும்
கோபங்களின் தொடர்ச்சியில்
துவளும்போதும்
விசனங்களின் விரட்டல்களில்
விம்மும்போதும்
எதிர்பார்ப்புகளின் எள்ளல்களில்
எழும்பும்போதும்
அச்சத்தின் அச்சுறுத்தல்களில்
அல்லல்படும்போதும்
படபடப்புகளின் படையெடுப்பில்
பதறும்போதும்

இந்தத் தூக்கம் மட்டும்
விழிகளைவிட்டு வெளிநடப்பு செய்கிறது
பல வேளைகளில்....
இமைகளுக்கு மேல் அமர்ந்து கொண்டு
இதயத்தைத் துழாவுகிறது
சில வேளைகளில்...

அதே கதைதான்..
நீங்களும் கடந்திருக்கக் கூடும்!
( படரும் )

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment