Friday, February 10, 2017

புல்லுருவி

நல்மரத்தில் புல்லுருவியாய்
நெறியெனும் நஞ்சேற்றி
நாசம்செய் முற்படுவோர்
நண்பரெனும் போர்வைதனில்
நயவஞ்சகமாய் கலந்துவருவர்
நட்புகளே கவனம்காப்பீர்
உறங்கும் உறைவாளுள்
உன்னுயிர் சிதைக்கவே
உணர்ச்சிமிக ஏத்திடுவர்
உண்மைதனை ஒளித்திடுவர்
உலகமகா சதிவலையில்
உன்னுறவும் சாய்த்திடுவர்
களைப்புமிக நீயடைந்து
கவலைக்கடல் நீயாழ்ந்து
கண்சற்றே மூடுகையில்
கண்ணிமை பிடுங்கியுன்
கனவுப்பயணம் சீரழித்து
கட்சிக்கொடி நக்கிடுவர்

No comments:

Post a Comment