Friday, February 10, 2017

நிறமற்ற ஒரு கடவுளின்



ஒரு வெற்றிடத்தில் இருந்துதான்
இதைத் தொடங்குகிறேன்
பொதுவெளிகளுக்குள் அழுக்கில்லாத
ஓர் இடத்தினைப் பிடித்து
மனிதர்களிலில்லா ஒரு மதத்தினை
தேடிப் பிடித்து
நிறமற்ற ஒரு கடவுளின்
கையை இறுக்கியணைத்து
இந்தப் பயணம் தொடங்குகிறேன்

நீட்டியெழும் கரங்களுக்குள்
ஒவ்வொரு வண்ணமாய்
ஒரு வேதப் புத்தகம்
உதிர்ந்து விழும் வார்த்தைகளுக்குள்
என் சக்கரம் சிக்கிடாமல்தான்
பயணிக்க முயற்சிக்கிறேன்
சகதிகளிலும் சாக்கடைகளிலும்
சக்கரம் விழுந்தெழுவதைத்
தவிர்க்க முடியாமலேயே எழுந்தெழுந்து
தொடர்கிறேன்.....

யாரோ ஒரு கடவுளுக்குள்
விழும்வரை நீயும் செல்
எனச் செவியறையும் குரல்களில்
செவிடாகத்தான் செல்கிறேன்
வீழும்வரை அல்ல ..
யாரேனும் வீழ்த்தும்வரை!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment