Friday, February 10, 2017

துளிப்பா 08

குடை மறுத்து நீ
மழை நனையும்போது தெரிகிறது
நிலவின் அழகு
--------------------------------
உன் உதட்டுச் சாயங்களில்
இரவல் கொண்டு வாழ்கிறது
அந்திச் சூரியன்
---------------------------------
எழுதப்படாத ஒரு கவிதைக்காக
உன்னை நோக்கித் தலை சாய்கிறது
வானவில்
-------------------------------------

தானியங்கி பணப்பட்டுவாடா
உயிர் இயந்திரங்கள்
அப்பாக்கள்


புன்னகைகளை முகத்தில் வைத்து
முதுகில் குத்திவிட்டுப் போகிறது
துரோகம்




வானில் குதித்த களிப்பில்
ஜன்னல் ஓரம் விழுந்தது
விழியில் நிலா

No comments:

Post a Comment