Friday, February 10, 2017

இடைவெளியின் மெல்லிய மௌனத்தினூடே


இளைப்பாற அமர்ந்த
ஓர் இடைவெளியின் மெல்லிய மௌனத்தினூடே
உன் வருகை
என்னை நிமிரச் செய்கிறது...
சொல்லிக்கொள்ளாமல் நகர்ந்த வார்த்தைகளின்
நகரல்களில்
உனக்கும் எனக்கும் பங்கில்லையென
மறுக்க முடியவில்லை..

நாள்காட்டிகள் மட்டும் கிழியவில்லையென
உன் முகரேகைகள் காட்டுகின்றன..
ஆங்காங்கே சில வெள்ளிக்கம்பிகள்
உன் கருத்த கூந்தலினூடே……

என்னையும் ஏதோ ஒரு வகையில்
நீ ஒப்பீடு செய்திருக்கலாம்..
ஒரு புன்முறுவலின் தழுவலில்
விரல்கள் ஒரு முடிவு எழுதுகையில்
மீண்டும் நிகழ்கிறது
நம் பிரிவு..

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment