Friday, February 10, 2017

முகநூல் நட்பென்று



நிறமற்ற ஒரு மழையில்
அவனுடன் நடந்தே வருகிறேன்
அச்சுறுத்தல் அகன்ற
அந்த இரவின் விளிம்பில்
என்னைப் போல் 
யாரேனும் ஒருவன் வரக்கூடும்
அவன் கண்ணுக்குத் தெரியாத
என்னையும்
என் கண்ணுக்குத் தெரியாத
அவனையும் சுமந்தே
இந்தப் பாதைகள் நீள்கின்றன
விருப்புகளென்று!!

முகங்கள் தோன்றும்
ஏதாவது ஒரு வெளிச்சத்தில்
முகமன் புன்னகையுமின்றி
நானும் அவனும்
மீண்டும் தொடர்வோம் பயணங்களை...
முகநூல் நட்பென்று!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment