Friday, February 10, 2017

ஒரே நொடியில்





அழைக்காமலேயே அந்தக் காற்று
ஒரே ஒரு முறை
வாசல் பக்கம் எட்டிப் பார்த்தது
தென்றலா என்று தெரியாது..
ஆனால்
கொஞ்சக் கொஞ்சமாக சேர்த்த
கனவுகளை..
ஒரே நொடியில் சுருட்டிக் கொண்டு போனது!
காற்றுக்கு உருவமில்லை என்று சொல்வதை
நம்ப
கொஞ்சம் சிரமமாயிருக்கிறது..
மனமும் இல்லை என்றாவது சொல்லியிருக்கலாம்!!!!

#முனியாண்டி_ராஜ்.

No comments:

Post a Comment