Friday, May 13, 2016

*தொழிலாளர் தின வாழ்த்துகள்*



*தொழிலாளர் தின வாழ்த்துகள்*

எழுந்து நிற்கும் கட்டங்களாகட்டும்
விரிந்து நீளும் சாலைகளாகட்டும்
கறைபடியா கரங்களில் ...
உழைப்பில் மட்டுமே உதிரம் கலந்தோம் ..
அது எப்படி
எங்களை உறிஞ்சிய கரங்கள்
கறையானது....

தொழி லாளி என்று நாங்கள்
அழைக்கப்படலாம்
முதலாளித்துவ வர்க்கங்களில்
இன்னும் கூலிகளாகவே இருக்கிறோம்
சீவப்பட்டு வெண்ணீர் வகுத்த
மரங்களுக்காக நாங்கள்
செந்நீர் இழந்திருக்கிறோம்..
அறுந்து விழும் செம்பனைக் குலைகளில்
எங்கள் குலைகள் வேகின்றன..

ஊருக்கான உலைகளில் வேவதை
பார்க்கும் இடைவெளி தருணங்களில்
எங்கள் உலைகளையும்
கொஞ்சம் எட்டிப் பாருங்கள்..
வெந்து கொண்டிருப்பது
வயிறாகவும் இருக்கலாம் ..

எது எப்படியோ..
மறவாமல் சொல்லி விடுங்கள்
வாழ்த்துகளை...
மீண்டும. கேட்பதற்கு ...

ஆண்டொன்று காத்திருக்க வேண்டும்!

*முனியாண்டி ராஜ்.*
See more

No comments:

Post a Comment