Sunday, May 29, 2016

சினத்தின் மெல்லிய விஷங்களில்


ஏதோ ஒரு முகமூடியில்
உருவங்களாய் சுற்றிச் சுற்றிச்
வருகின்றன..
அத்துணைக் கோபங்களையும்
அறுத்தெற முடியா வக்கிரங்களையும்
மனம் அஞ்சும் வஞ்சகங்களையும்
ஒரே முகமூடியில்
எவ்வாறு ஒளித்தீர்கள்..

நீளும் நட்புக் கரங்கள்
குளிர் போர்த்தி
சினம் சுமந்து வருகின்றன
அறியா இழையில் இறங்கும்
சினத்தின் மெல்லிய விஷங்களில்
சுதாரிக்கும் முன்
காயப்பட்டு விடுகிறது மனம்
சிரிப்புகளில் தெறித்த 
உங்கள் சொல் சிலேடைகளைத்
தேடத் துவங்கும் நேரம்...
என்னை நானே
நொந்து கொண்டு விடை பெறுகிறேன்..

உங்கள் முகமூடிகளையே
முகமென்று நம்பியதற்காக!

*
முனியாண்டி ராஜ்.*

No comments:

Post a Comment