Sunday, May 29, 2016

பாறைகள் நகரும் நேரம் .....


யாரோ ஒருவன்
இங்கே முகத்தைத் தொலைத்திருக்கலாம் 
முகத்தை மறந்துவிட்டு 
முகமூடியில் புதைந்திருக்கலாம்
இனிப்பு வார்த்தைகளில்
உங்கள் மனம் களவாடலாம்
வெற்றுப் புன்னகைகளில்
வெற்றிக் கொடி 
உங்கள் இதயம் நோக்கிச்
செலுத்தப்படலாம்..
விழித்திருக்கும் வேளைகளிலும்
உங்கள் விழிகளில் ஒன்று
பாதைகள் மாற்றப்படலாம்

உங்களுக்கான குழிகளை
உணரா வண்ணம்
உங்களையே தோண்டச் செய்யலாம் 
உறங்கும் நேரத்தில்
உச்சந்தலை நோக்கி 
பாறைகள் நகரும் நேரம் .....

......
தொலைந்த முகம் மட்டும்
முகமூடியாய் உங்களைக் கடக்கும்! 

*
முனியாண்டி ராஜ்.* 

No comments:

Post a Comment