Sunday, May 29, 2016

நஞ்சு



அன்பாய் அளவளாவி
ஆயிரம் பூக்கள் மனமெங்கும் மலர
ஆனந்தமாய் துள்ளிப் பறந்தேன்
பார்ப்போர் பழகுவோர் நண்பரென
நகமனைத்தும் வரைந்து வைத்தேன்..
நா மீட்டிய வார்த்தைகளில் 
நாள் நனைய குளித்தேன்..

வெண்மைச் சிரிப்பினில்
கனவுகளிலும் பூட்டினேன் தேர்
உள்ளத்துச் சொல்லனைத்தும்
உதடுகளிலேயே வலம் விட்டேன்
நம்பிக்கையில் கைகொண்டு

சட்டென 
நீலம் பூத்து உதிர்ந்தன
மனவெளி பூக்கள்..
எந்த நாவில் வசித்தது...

நஞ்சு !!!

No comments:

Post a Comment