Friday, May 13, 2016

மனிதம்


உடைந்த குரலில்
உதவி கோரிக்கொண்டிருந்தது
அந்த உயிர்
கூடி நின்ற திறன்பேசிகள்
முகநூல்களுக்கு நேரலை...
செய்து கொண்டிருந்தன விருப்புகளுக்கு..
ஆம்புலன்ஸ் வரும் வரை தொடாதிங்க..
அக்கறையாய் எச்சரித்தார்
மனிதம் அணிந்த மிருகர்

குருதி நனைத்த தோழமையை
வாய் கௌவி இழுத்துக் கொண்டிருந்தது
கண்ணீருடன் ....
மிருகம் அணிந்த மனிதம்
மறுமுனையில்!!

*முனியாண்டி ராஜ்.*

No comments:

Post a Comment