Friday, May 13, 2016

ஒரு சுவாசத்தின் தொடக்கம்

என் மரணத்தின்
பயணத்தில்..
நீ உதிக்கும் சில கண்ணீர்த் துளிகளில்
என்னைப் பற்றிய நினைவுகளை
அப்போதே...
நீ கழுவிக் கொள்ளலாம்..

என் இதயத்தால் எழுதிய
கவிதைகளை
விரல்வழி வழுக்கல் என்று
நீ
ஒதுக்கித் தள்ளலாம்...
மறுபிறவி நம்பிக்கை
உனக்கு இல்லையாதலால்
மீண்டும் பிறப்பேன்
என்ற வார்த்தைகளை
மறந்து களிக்கலாம்..
பரவாயில்லை...
உன் இதயத்தின் மூலையில்
எங்கேயாவது தேடிப்பார்.....
என் சுவாசத்தின் எச்சம்
ஏதேனும் மீந்திருக்கலாம்..
- முனியாண்டி ராஜ்.

No comments:

Post a Comment