Friday, May 13, 2016

வாக்குறுதியில் மறைந்திருக்கும் நஞ்சுகள்

என்னருமைத் தோழா..
சில வாக்குறுதிகளில்
வேரில்லாமல் இருக்கலாம்..
வேரில்லாமல் மரம் ஏது என்று
கேள்வி கேட்காதே......
நீரில்லாமலேயே செடி முளைக்கலாம்!

உனக்குக் கைநீட்டும் கைகளில்
அதன்
அழுக்கு ஒட்டாமல் பார்த்துக்கொள்..
தேவதையை விட பேயா
பேயை விட தேவதையா என்று
உன்னை நீயே கேட்டுக் கொள் ..
விமர்சனங்களில் விளம்பரங்களில்
இதயம் தொலைத்து விடாதே ..
செவியில் விழும் வார்த்தைகளைச்
சவரம் செய்து பார்..
கடல்களை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்
விழுந்து தொலைந்து விடாதே ..
உன் பாதங்களையும் பாதைகளையும்
நீ முடிவு செய்து கொள்..
கேள் .. கேள் .. கேள் ..
பதில்களுக்குள் காணாமல் போகாதே ..
மூளைச் சலவை
உனக்குப் புதியதாக இருக்கலாம்..
புரட்டியும் போடலாம்!
உனது பொழுதுகளை
உன் விரல்களிலேயே வைத்துக்கொள்..
அடுத்தவன் ஏறும் படகாக
உன் முதுகை வளைக்காதே !

No comments:

Post a Comment