Friday, May 13, 2016

ஏக்கம்


திரும்பத் திரும்ப அதே வளைவில் நின்று கொண்டு
பரிகாசமாய் சிரிக்கிறாய்..
இழந்துவிட்ட ஏதோ ஒன்றை எடுக்கும் முயற்சியில்
தற்செயலாக என்று கூட கூற முடியாத சூழலில்
உன் கண்களில் உரசிச் செல்கிறது...
என் இறந்த காலங்கள்…
மீண்டும் அதே பார்வையில் தான்
நீ நின்று கொண்டிருக்கிறாய்…
வயதின் சீற்றம் உன் பார்வையில்
என்றுமே இருந்ததில்லை ….
என் வயதை மட்டும்தான்
காலம் கொஞ்சம் கிழித்துப் போட்டிருக்கிறது…
வளைவுகளுக்குள் கடந்து போகும் யாருக்குமே
நீ தெரிவதில்லை….
நீ மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பது
என்னுள் மட்டும்தான் என்று அவர்களுக்குத் தெரியும் வரை
அந்த வளைவுகளுக்குள் …….
எனக்கு மட்டும்தான் நீ தெரிவாய்!!!
- முனியாண்டி ராஜ்.
 

No comments:

Post a Comment