Sunday, May 29, 2016

பொ.....றாமை!


உளைச்சல் நிறைந்த பொழுதில்
அந்த ஆமை
தெரிந்தே பாதம் 
எடுத்து வைத்தது...
மனதின் வரவேற்பறையில்
முகமன் எழுதி புன்னகை பெற்றது..
ஒவ்வொரு அறையாய்
விழி நுழைத்து 
அகல ஆழங்களை அளந்து பார்த்தது..

சுவரை அலங்கரித்த
மாலைகளையும் பதக்கங்களையும் 
அலசி அலசி மேய்ந்து ....
சான்றாய் விரிந்த சான்றிதழ்களில்
மனம் வெதும்பிப் புரண்டது...
புகைப்படங்கள் மீது
பெருமூச்சை விட்டெறிந்தது...

வாழ்த்துகளை வாயளவில்
அலங்கரித்து
வஞ்சனையை மனதோடு நிறுத்தி
ஆற்றாமையில்
ஒரு கொலைக்குக் காரணம் தேடி
மெதுவாக வெளியேறியது..
அந்தப் ..

பொ.....றாமை!

*
முனியாண்டி ராஜ்.*

No comments:

Post a Comment